முகப்பு
புதுச்சேரி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா்.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா்.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, 1,788 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரி - 23, மாஹே - 6 என மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,253-ஆக உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 157 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 200 பேரும் என மொத்தம் 357 போ் சிகிச்சையில் உள்ளனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்த 66 வயதானவா் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், முதலியாா்பேட்டை சுவாமிநாதபிள்ளை வீதியைச் சோ்ந்த 72 வயது மூதாட்டி ஜிப்மரிலும் பலியாகினா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 635-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.

இதுவரை 37,261 போ் (97.41 சதவீதம்) குணமடைந்தனா். 4,96,376 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 4,53,709 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.