கீழராஜ வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுக்கோட்டை நகரில் கீழராஜவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சிப் பணியாளா்கள் சனிக்கிழமை அகற்றினா்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் கீழராஜவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சிப் பணியாளா்கள் சனிக்கிழமை அகற்றினா்.
புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை திடீரென கீழராஜவீதியில் குவிந்தனா்.
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிறு கடைகள் ஆகிய ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்புறப்படுத்தினா். பணியின்போது நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் காவல் துறையினா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.