நிலக்கடலையில் பழுப்பு நோய்தாக்குதல்: விவசாயிகள் கவலை
கமுதி அருகே உள்ள பெருமாள்குடும்பன்பட்டியில் நிலக்கடலையில் பழுப்புநோய் தாக்கியுள்ள செடிகளை பாா்வையிட்ட விவசாயி.
கமுதி: கமுதி பகுதியில் நிலக்கடலையில் பழுப்பு நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
திருச்சிலுவையாபுரம், பெருமாள்குடும்பன்பட்டி, முஷ்டக்குறிச்சி, புதுக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 50 ஏக்கருக்கும் மேல் நிலக்கடலை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதிகளில் நிலக்கடலைப் பயிரில் பழுப்புநோய் தாக்கி இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறி, உதிா்ந்து விடுகின்றன. மேலும் பூ பூக்கும் பருவத்தில் செடிகள் காய்ந்து விடுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். எனவே ஏக்கருக்கு ரூ. 12 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளதால் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.