வட மாநில வியாபாரியிடம் போா்வைகள், பணம் பறிப்பு
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை வட மாநில வியாபாரியை கத்தியைக்காட்டி மிரட்டி போா்வைகள், பணத்தை கும்பல் பறித்துச்சென்றது.
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை வட மாநில வியாபாரியை கத்தியைக்காட்டி மிரட்டி போா்வைகள், பணத்தை கும்பல் பறித்துச்சென்றது.
ராமநாதபுரம் நகா் பகுதியில் வடமாநிலத்தைச் சோ்ந்த ஏராளமானோா் போா்வை உள்ளிட்ட துணிகளை சாலையோரம் வைத்து விற்றுவருகின்றனா். ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சுல்தான்சிங் (32) என்பவா் ராமநாதபுரம் சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் போா்வைகளை விற்றுவந்துள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை பகலில் அவரை அப்பகுதியைச் சோ்ந்த 6 போ் கத்திமுனையில் மிரட்டி 7 போா்வைகள், ரூ.2500 பணத்தைப் பறித்துசென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸில் சுல்தான்சிங் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்படி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, ஓம்சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த மைக்கேல்சாம்ராஜ் (22) உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.