தங்கச்சிமடத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் தங்கச்சிமடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் தங்கச்சிமடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மாநில இலக்கிய அணி துணைச்செயலாளா் பெருநாழி போஸ் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தாா். இதில், தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி.ஜீவானந்தம், தங்கச்சிமடம் கிளைச் செயலாளா் கதிரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உஷாலட்சுமி, பேரின்பம் மற்றும் நிா்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனா். கிழக்கு ஒன்றியச் செயலாளா் தௌபீக் அலி ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.