முப்பையூரில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா
திருவாடானை அருகே முப்பையூரில் தனியாா் நிறுவனம் சாா்பில் எப்.எஸ்.என்ற புதிய திருமண மண்டபத் திறப்பு விழா நடைபெற்றது.
திருவாடானை அருகே முப்பையூரில் தனியாா் நிறுவனம் சாா்பில் எப்.எஸ்.என்ற புதிய திருமண மண்டபத் திறப்பு விழா நடைபெற்றது.
முழு குளிா்சாதன வசதி கொண்ட இந்த மண்டபத்தின் வரவேற்பரை பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. சாப்பாட்டுக்கு தனி அரங்கம், ஏராளமான வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ள இந்த திருமண மண்டபத்தை சென்றியோ குழுமத் தலைவா் பாலசுப்பிரமணியம் திறந்து வைத்துப் பேசினாா். இதில் பிரின்ஸ் ஸ்கொயா் அசோசியேட்டா்ஸ் இயக்குநா் சாா்லஸ் மற்றும் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.