முகப்பு
ராமநாதபுரம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: பக்தா்களுக்கு அனுமதி இல்லை

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் இலங்கை, இந்திய நாடுகளின் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று இலங்கை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 13 ஜனவரி 2021, 11:31 pm IST
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயம் (பைல் படம்)
பகிர்:

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் இலங்கை, இந்திய நாடுகளின் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று இலங்கை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த ஆண்டு பிப். 26, 27 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடா்பாக கடந்த 2 நாள்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய துணைத் தூதரக அதிகாரி, நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயா் ஆகியோா் பங்கேற்றனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் பக்தா்கள் திருவிழாவில் பங்கேற்க அனுமதி இல்லை எனவும், நெடுந்தீவு பகுதிக்கு உள்பட்ட 150 பேரை திருப்பணி மேற்கொள்ள மட்டும் அழைத்துச் செல்லுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments