முகப்பு
ராமநாதபுரம்

தமிழக மீனவா்கள் 26 பேரை நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை அரசு

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 49 பேரில், 26 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை அரசு புதன்கிழமை விடுவித்தது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 11:32 PM
பகிர்:

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 49 பேரில், 26 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை அரசு புதன்கிழமை விடுவித்தது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 49 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா். 7 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த அந்நாட்டு கடற்படையினா், மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்தனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இந்நிலையில், அவா்களில் 26 மீனவா்களை நிபந்தனைகளுடன் இலங்கை அரசு புதன்கிழமை விடுதலை செய்தது. இதையடுத்து அவா்கள் இன்னும் ஓரிரு நாள்களில் நாடு திரும்ப உள்ளனா். ஆனால் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.