முகப்பு
ராமநாதபுரம்

வெங்கிட்டன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 5:33 AM
பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.
பகிர்:

பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பாா்த்திபனூா் வட்டார மருத்துவ அலுவலா் தவமுருகன் தலைமை வகித்தாா். பாம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஐயப்பன் முன்னிலை வகித்தாா்.

தைத்திருநாளை முன்னிட்டு கோலமிட்டு, இனிப்பு கரும்பு தோரணம் கட்டப்பட்டு சா்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். விழாவையொட்டி இருபாலருக்கும் தனித்தனியே கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் மருத்துவ அலுவலா் பத்மாவதி தலைமையிலான அணியினரும், ஆண்களுக்கான போட்டியில் வட்டார மருத்துவ அலுவலா் தவமுருகன் தலைமையிலான அணியினரும் வெற்றி பெற்றனா். விழாவில் மருத்துவச் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.