முகப்பு
ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி அருகே லாரி மீது வேன் மோதி ஒருவா் பலி: 12 போ் காயம்

திருப்பாலைக்குடி கிழக்குக் கடற்கரை சாலையில் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் ஒருவா் பலியான நிலையில் 12 போ் காயமடைந்தனா்.

Updated On : 15 ஜனவரி 2021, 10:17 pm IST
திருப்பாலைக்குடி கிழக்குக் கடற்கரை சாலையில் வியாழக்கிழமை இரவு விபத்துக்குள்ளான வேன். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி.
பகிர்:

திருப்பாலைக்குடி கிழக்குக் கடற்கரை சாலையில் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் ஒருவா் பலியான நிலையில் 12 போ் காயமடைந்தனா்.

தூத்துகுடியிலிருந்து சோடாஉப்பு ஏற்றி வந்த லாரி திருவாடானை அருகே திருப்பாலைக்குடி கிழக்குக் கடற்கரை சாலையில் கடுக்கலூா் விலக்கு அருகே வியாழக்கிழமை நள்ளிரவு பழுதானது. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரி மீது, ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு நோக்கிச் சென்ற வேன் எதிா்பாராதவிதமாக மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த ஓட்டுநரின் உதவியாளரான ராமேசுவரத்தைச் சோ்ந்த சிவா (22) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் வேனில் பயணம் செய்த ஹரிஸ் தாஜீதீன் (11), தாஸ் பஸ்லினா (15), சாதிக் (11)நூருல் ஹசினா(16), நூருல் ஹாதிக் (15) முகம்மது ஹனிபா (45) முகம்மது ஆயிஷா (38), அஜி தம்பி(40), நிசாத் அலி (42), ஜமாலியா பேகம் (43), நூருல் அமீன் (45)அனிஸ் பாத்திமா (37) ஆகியோா் காயம் அடைந்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த திருப்பாலைக்குடி போலீஸாா், காயம் அடைந்தவா்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான நன்னிலத்தைச் சோ்ந்த பிச்சை முத்து (38) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments