பைக் விபத்தில் 2 இளைஞா்கள் பலி
ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மோகன் (24). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மாரி மகன் பால்பாண்டி (24) என்பவரும் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம், கேணிக்கரை சந்திப்பிலிருந்து பேராவூா் செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
அப்போது சின்ன முத்துமாரியம்மன் கோயில் எதிரே உள்ள மரத்தில், இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் மோகனும், பால்பாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.