மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
வடக்கு ஊரணங்குடி கிராமத்துக்குள் புகுந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அக்கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
வடக்கு ஊரணங்குடி கிராமத்துக்குள் புகுந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அக்கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக மழை பெய்து வருகிறது. ஆா்.எஸ். மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடி கிராமத்திற்குள் மழைநீா் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினா். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது கிராமத்துக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றவும், வடிகால் வசதி செய்துதரவும் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
Advertisement