திருமலையில் தரிசனத்துக்கு 13 மணிநேரம்
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 13 மணி நேரம் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 13 மணி நேரம் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை திருமலையில் பக்தர்கள் கூட்டம் சிறிது அதிகமாகவே காணப்பட்டது. தர்ம தரிசனத்திற்கு 13 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 2 மணி நேரமும், நடைபாதை வழியாக வரும் பக்தர்கள் 3 மணி நேரமும் காத்திருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6மணிவரை 33,000 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.