வீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்
காட்டுமன்னார்கோவில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை கருடசேவை உற்சவம் நடை
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM
காட்டுமன்னார்கோவில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை கருடசேவை உற்சவம் நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை கருடசேவையை முன்னிட்டு, கருட வாகனத்தில் ஸ்ரீசுந்தரகோபாலப் பெருமாள் வீதிஉலா புறப்பாடு நடைபெற்றது. 25-ம் தேதி தேர் திருவிழாவும், 28-ம் தேதி தெப்போற்சவத்துடன் பிரம்மோற்சவம் முடிவடைகிறது.
Advertisement
இந்து சமய அறநிலையத் துறை செயல்அலுவலர் ப.வெங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.என்.தோத்தாத்திரி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.