வீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்
காட்டுமன்னார்கோவில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை கருடசேவை உற்சவம் நடை
காட்டுமன்னார்கோவில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை கருடசேவை உற்சவம் நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை கருடசேவையை முன்னிட்டு, கருட வாகனத்தில் ஸ்ரீசுந்தரகோபாலப் பெருமாள் வீதிஉலா புறப்பாடு நடைபெற்றது. 25-ம் தேதி தேர் திருவிழாவும், 28-ம் தேதி தெப்போற்சவத்துடன் பிரம்மோற்சவம் முடிவடைகிறது.
Advertisement
Advertisement
இந்து சமய அறநிலையத் துறை செயல்அலுவலர் ப.வெங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.என்.தோத்தாத்திரி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.