காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்யும் இடம் தற்காலிக மாற்றம்
காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்யும் இடம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்யும் இடம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்ய பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களின் வசதிக்கேற்ப கோயில் நிர்வாகம் ரூ.500, ரூ.750, ரூ.1,500, ரூ.2,500, ரூ.5,000 என்ற கட்டணங்களின்படி ராகு-கேது பரிகார பூஜை செய்யும் வசதியையும், அதற்கென தனித்தனி இடங்களையும் ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் ரூ.500 என்ற கட்டணத்தில் கோயிலுக்கு வெளியில் உள்ள ஸ்ரீகிருஷ்ண தேவராய மண்டபத்தில் ராகு-கேது பரிகார பூஜை நடைபெற்று வருகிறது.
இந்த மண்டபத்தில், ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, வரும் 7ஆம் தேதியன்று காலை முதல் சமஷ்டி கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் ராகு-கேது பரிகார பூஜை செய்ய வரும் பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி அந்த பூஜையை கோயிலுக்குள் உள்ள மந்துகொட்டு மண்டபத்திற்கு மேற்கொள்ளலாம். இது ஒரு தற்காலிக மாற்றம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.