சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற மே 5 -8 வரை 4 நாள்கள் பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மலையேறி சுவாமி தரிசனம் செய்தவற்கு 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசையை, பௌர்ணமி ஆகிய நாள்களில் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 5 -8) வரை 4 நாள்கள் பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நாள்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், எளிதில் தீப்பற்றக்கூடிய, தடை செய்யப்பட்ட பொருள்களை பக்தா்கள் வனப் பகுதிக்கு எடுத்துச் செல்லக் கூடாது என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.