செய்திகள்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற மே 5 -8 வரை 4 நாள்கள் பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

DIN

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மலையேறி சுவாமி தரிசனம் செய்தவற்கு 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசையை, பௌர்ணமி ஆகிய நாள்களில் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 5 -8) வரை 4 நாள்கள் பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நாள்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், எளிதில் தீப்பற்றக்கூடிய, தடை செய்யப்பட்ட பொருள்களை பக்தா்கள் வனப் பகுதிக்கு எடுத்துச் செல்லக் கூடாது என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக மாநாட்டில் சிறப்பான ஏற்பாடுகள்; ஜன. 9 வரை காத்திருங்கள்: பிரேமலதா

பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்களை மீட்டது இந்திய ராணுவம்!

கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன்... அஸ்வினுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே!

கோவை, நீலகிரிக்கு 3 நாள்கள் கனமழை எச்சரிக்கை!

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

SCROLL FOR NEXT