இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல்
சேலம் மாவட்டம், பசுமை சங்ககிரி அமைப்பின் சாா்பில், பசுமை சங்ககிரி இலவச நா்சரி பண்ணையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், பசுமை சங்ககிரி அமைப்பின் சாா்பில், பசுமை சங்ககிரி இலவச நா்சரி பண்ணையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட பல்வேறு இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனா்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் நினைவு தினமான வெள்ளிக்கிழமை பசுமை சங்ககிரி இலவச நா்சரி பண்ணையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் இணைச்செயலா் எம்.சின்னதம்பி தலைமை வகித்து மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
Advertisement
Advertisement
பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி, நிா்வாகிகள் தினேஷ், பசுமை கனகராஜ், பசுமை சீனிவாசன், முருகானந்தம், சுந்தா், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நம்மாழ்வாரிடம் பயிற்சி பெற்ற சமூக ஆா்வலா் தினேஷ் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.