முகப்பு
சேலம்

சங்ககிரி வஸந்தவல்லபராஜபெருமாள் கோயிலில் மார்கழி சிறப்புப் பூஜைகள்

ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயிலில் மார்கழி 27ஆம் ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னார் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி சிறப்புப் பூஜைகள் இன்று நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி, 2021 at 12:11 PM
சங்ககிரி ஸ்ரீ வசந்தவல்லிதாயார் உடனமர் ஸ்ரீ வசந்த வல்லபராஜ பெருமாள் உற்சவமூர்த்திகளுக்கு இன்று செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
பகிர்:

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயிலில் மார்கழி 27ஆம் ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னார் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி சிறப்புப் பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

மார்கழி 27ஆம் ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னார் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயிலில் அருள்மிகு வஸந்தவல்லி, அருள்மிகு வசந்தவல்லபராயபெருமாள் சுவாமிகளுக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் மார்கழி மாத தினசரி வழிபாடான திருப்பாவை பாடல்களை பக்தர்கள் பாடினர். இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச்சென்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.