இருவா் குண்டா் சட்டத்தில் கைது
சேலத்தில் தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
சேலத்தில் தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
சேலம், சின்னேரிவயக்காடு சினிமா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (36). அதேபோல பொன்னம்மாபேட்டை வன்னியா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அப்சல் (எ) கச்சா (28). இதில் பாண்டியன் மீது வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
அதேபோல, அப்சல் கச்சா மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாண்டியன், அப்சல் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதில் பாண்டியன் 7 முறையும், அப்சல் 3 முறையும் ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதானவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.