முகப்பு
சேலம்

இருவா் குண்டா் சட்டத்தில் கைது

சேலத்தில் தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 14 ஜனவரி, 2021 at 6:36 AM
பகிர்:

சேலத்தில் தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சேலம், சின்னேரிவயக்காடு சினிமா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (36). அதேபோல பொன்னம்மாபேட்டை வன்னியா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அப்சல் (எ) கச்சா (28). இதில் பாண்டியன் மீது வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

அதேபோல, அப்சல் கச்சா மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாண்டியன், அப்சல் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

Advertisement

இதில் பாண்டியன் 7 முறையும், அப்சல் 3 முறையும் ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதானவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.