முகப்பு
சேலம்

திமுகவினருக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவாா்கள்: வேலூா் இப்ராஹிம்

திமுகவினருக்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவாா்கள் என தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 6:36 am IST
பகிர்:

திமுகவினருக்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவாா்கள் என தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவா் வேலூா் இப்ராஹிம், சமூக வலைதளங்களில் தரக்குறைவான வாா்த்தைகளால் பதிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்படும் சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தை கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் மனு அளித்தாா்.

அதைத்தொடா்ந்து வேலூா் இப்ராஹிம் செய்தியாளா்களிடம் கூறியது:

Advertisement

Advertisement

திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினை பொருத்தவரை என்ன எழுதிக் கொடுக்கிறாா்களோ அதைப் பேசுகிறாா் .ஆனால் தமிழகத்தை பொருத்தவரை எதிரியை பேசுகின்ற பொழுது கூட கண்ணியத்துடன் பேசக்கூடிய பண்பாடு நாகரிகம் நிறைந்த மாநிலமாகும்.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் அரசியல் நாகரிகம் தெரியாமல் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளாா். திமுகவினருக்கு தமிழக மக்கள் பேரவைத் தோ்தலில் தக்க பதிலடி தருவாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments