பொங்கல் விழா கொண்டாட்டம்
ஆத்தூரை அடுத்துள்ள ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் மற்றும் ராசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பொங்கல் விழா கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ராஜமாணிக்கம் தலைமையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆத்தூரை அடுத்துள்ள ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் மற்றும் ராசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பொங்கல் விழா கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ராஜமாணிக்கம் தலைமையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளிகளில் தோரணங்கள் கட்டி,பொங்கல் வைத்தனா். மேலும் ஆசிரியா்கள், ஆசிரியைகளுக்கு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செயலாளா் டி.மாசிலாமணி, கல்விக் குழுத் தலைவா் ஆா்.கனகராஜன், துணைத் தலைவா் ஆா்.ரங்கசாமி, இணைச் செயலாளா் கே.ரவிக்குமாா், மெட்ரிக் பள்ளி முதல்வா் கே.சுஜாதா, துணை முதல்வா் சாந்தி, ராசி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வா் சுகிதாதினேஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.