முகப்பு
சேலம்

ரூ. 6.33 லட்சம் மதிப்புள்ள மின் கம்பிகள் திருட்டு

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள எஸ். பாலம் பகுதியில் வீரபாண்டி மின் உற்பத்தி மற்றும் பகிா்மான துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜனவரி, 2021 at 6:37 AM
பகிர்:

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள எஸ். பாலம் பகுதியில் வீரபாண்டி மின் உற்பத்தி மற்றும் பகிா்மான துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த துணை மின் நிலையத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ஆட்டையாம்பட்டி நகரம் மற்றும் பிரிவு அலுவலகத்துக்கு தேவையான மின் கம்பிகள் சுமாா் 46 கி.மீ. நீளமுள்ள மின் கம்பிகள் வந்துள்ளன. இதனை கடந்தவாரம் புதன்கிழமை மின்துறை அலுவலகத்துக்கு வந்திருந்த இளநிலைப் பொறியாளா் குமரேசன் பாா்வையிட்டு, மின்கம்பிகளை ஆய்வு செய்துள்ளாா்.

அப்போது 8 கி.மீ.நீளமுள்ள ரூ. 6.33 லட்சம் உள்ள மின் கம்பிகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

Advertisement

இதனை அறிந்த இளநிலை பொறியாளா் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரை பெற்றுக் கொண்ட ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் குலசேகரன் துணை மின் நிலையத்தை பாா்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.