பெண் மா்மச் சாவு
மேச்சேரியில் விதவைப் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
மேச்சேரியில் விதவைப் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள சோழபாண்டியா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளச்சி (48). இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். நான்கு வருடங்களுக்கு முன்பு இவரது கணவா் விஜயகுமாா் இறந்தாா். இதையடுத்து வெள்ளச்சி மேச்சேரி அருகே உள்ள தெத்திதிரிப்பட்டியில் உள்ள தம்பி அழகேசன் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் வெள்ளச்சி தருமபுரி, மேச்சேரி செல்லும் சாலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
Advertisement
இதுகுறித்து அவரது தம்பி அழகேசன் கொடுத்த புகாரின் பேரில் மேச்சேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.