கடி
ஆசிரியர்: ஏண்டா, பெஞ்ச் மேலே நின்னுட்டு முணுமுணுக்குறே..?மாணவன்: என்ன சார்... எப்ப பார்த்தாலும் என்னை பெஞ்ச் மேலே நிக்கச் சொல்றீங்க.
• ஆசிரியர்: ஏண்டா, பெஞ்ச் மேலே நின்னுட்டு முணுமுணுக்குறே..?
மாணவன்: என்ன சார்... எப்ப பார்த்தாலும் என்னை பெஞ்ச் மேலே நிக்கச் சொல்றீங்க... "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்'-ன்னு திருவள்ளுவர் சொன்னதை கொஞ்சம் எண்ணிப் பாருங்க சார்...
-குப்பிலியா கி.ஹரிஹரன்,
கும்பகோணம்.
• வாசு: டேய், நான் நேத்து உங்க வீட்டுக்கு வந்தேன். உங்க அப்பாகிட்ட உன்னை எங்கேன்னு கேட்டேன். அந்த மாடு எங்கேயாவது மேயப் போயிருக்கும்னு சொன்னாரு. உன்கிட்டே சொன்னாரா?
பாசு: ஆமாடா... நான் வெளிலேயிருந்து வந்ததும், ஒரு எருமை உன்னை வந்து தேடிட்டுப் போச்சுன்னு சொன்னாரு!
-மு.சூர்யா, த/பெ. முருகேசன், வீரக்கவுண்டனூர் (அஞ்சல்),
புத்திரக்கவுண்டபாளையம் (வழி),
ஆத்தூர் தாலுகா,
சேலம் மாவட்டம் 636 119.
• மகனிடம் தந்தை: யாரிடம் பேசினாலும் டி, டா போட்டு மரியாதைக் குறைவா பேசக்கூடாது..!
மகன்: சரி, டாடி!
-கி.திவ்யாஜோதி,
திருவொற்றியூர்.
• ஒருவர்: என்னது அந்த டாக்டர், கோதண்டம், எம்.பி.பி.எஸ்., கும்ப ராசி-ன்னு போர்டு வச்சிருக்காரு?
மற்றவர்: அவர் ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லக் கூடாதாம்..!
-சி.விஜயாம்பாள்,
கட்டிகானப்பள்ளி.
• ஆசிரியர்: ஒரு நாளைக்கு இவ்வளவு தப்பு பண்றியே..! எப்படிடா உன்னால முடியுது?
மாணவன்: காலையிலே சீக்கிரமே எழுந்துடுவேன் சார்...!
ஆசிரியர்: !!!!!
-கா.முருகேஸ்வரி,
கோவை.
• ஆசிரியர்: ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்-ன்னு சொன்னா, ஓடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்-ன்னு படிக்கிறானே, இவன் யாருடா?
மாணவன்: அவனா சார்... அவன் ஏலசீட்டு நடத்துறவரோட பையன் சார்...
-கு.பெ.இளன்,
த/பெ. கு.பெருமாள்,
12, மெüலீஸ்வரர் நகர்,
மெüலிவாக்கம்,
சென்னை600 125.