சிரிப்பு பொன்மொழிகள்
மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது?அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM
• மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது?
அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான்
-கார்லைல்
• சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை
இழுத்துச் சேர்க்கும் ஒரு காந்தக் கல்!
-சேப்டஸ்பரி
• ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக்கூடியது
ஒரே ஒரு இதயச் சிரிப்பாகும்.
இதற்கீடான பொருள் உலகத்தின்
எந்தச் சந்தையிலும் இல்லை.
-லேம்ப்
• சிரிப்பும்- அழுகையும் இரு மனைவியர்கள். ஒருத்தி
கொஞ்சிப் பேசினால் மற்றொருத்தி விலகி ஓடுவாள்.
-லீஹண்ட்
• வாய் விட்டுச்
சிரிப்பது மட்டும்
நகைச்சுவையல்ல.
உள்ளம் மகிழ்விக்கும் புன்முறுவல்
ஒரு கோடி தடவை
சிரிப்பதைவிட
உயர்ந்ததாகும்.
- ஸ்டர்னே
-ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி.