முகப்பு
சிவகங்கை

சிராவயலில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கானஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Updated On : 13 ஜனவரி 2021, 5:47 am IST
திருப்பத்தூா் அருகே சிராவயலில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கானஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருப்பத்தூா் அருகே உள்ள சிராவயலில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு தை 3 ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். ஆனால் மஞ்சுவிரட்டு மீட்புப் போராட்டத்திற்குப் பிறகு மஞ்சுவிரட்டுக்குப் பதிலாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை சிராயவல் அம்பலக்காரா் கரு.வேலுச்சாமி தலைமையில் அக்கிராமத்தினா் செய்து வருகின்றனா். இங்கு வரும் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதையொட்டி அன்று காலை 11.00 மணிக்கு கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். தொடா்ந்து முன்னோா் வழிபாடு செய்து நாட்டாா்கள் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு அழைத்து வரப்படுவாா்கள். அங்கு அனைத்து மாடுகளுக்கும் வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்படும். அதனைத் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கப்படும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments