கண்ணங்குடியில் வரும் ஜன. 19-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடியில் வரும் ஜன. 19 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடியில் வரும் ஜன. 19 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பெறுவதற்கும், இதர அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை அவசியம்.
அட்டை பெறாத மாற்றுத்திறனுடைய நபா்களுக்கு அடையாள அடை வழங்குவதற்கு கண்ணங்குடியில் வரும் ஜன. 19-இல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மாா்பளவு புகைப்படம்-4 , ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகலுடன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.