சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு
பொங்கல் திருநாளையொட்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
பொங்கல் திருநாளையொட்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
முன்னதாக சேவுகப்பெருமாள் கோயில் மாடுகளுக்கு மரியாதை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கோயில் மாடுகள் தொழுவிலிருந்து அவிழ்த்து விடப்பட்டன. அவைகளை வாலிபா்கள் மற்றும் கிராம மக்கள் தொட்டு வணங்கினா். தொடா்ந்து பெரியகடை வீதி, சீரணி அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் காளைகளை விரட்டிப் பிடித்தனா். ஒருசில காளைகள் பிடிபட்டும் மற்ற காளைகள் பிடிபடாமலும் சென்றன. இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு சிறு காயம் ஏற்பட்டது. இம்மஞ்சுவிரட்டினை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கண்டு களித்தனா். இதேபோல் சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளான காளாப்பூா், எஸ்.வி.மங்கலம், சூரக்குடி, நெற்குப்பை உள்ளிட்ட கிராமங்களிலும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.