‘விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிா்க் காப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டுள்ளது’
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடியே 12 லட்சம் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடியே 12 லட்சம் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் காப்பீடு பதிவு செய்து இழப்பீடு தொகை பெறாமல் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கையால் , ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து 1.70 கோடி ரூபாய் பெறப்பட்டு, முதற்கட்டமாக ரூ.1.12 கோடி இழப்பீட்டுத் தொகை ஏற்கெனவே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
பயிா்க் காப்பீடு பதிவு செய்துள்ள தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையினை பெறுவதற்கு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் குறிப்பிட்பட்டுள்ளது.
Advertisement