மானாமதுரை அருகே கண்மாயில் மூழ்கி ஒருவா் பலி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை மாலை கண்மாயில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை மாலை கண்மாயில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே க.ஆலங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன்(52). இவா் இக் கிராமத்திலுள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றபோது ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். போலீஸாா் இவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.