முகப்பு
கவிதைமணி

அரியாசனம் !  கவிஞர் இரா .இரவி !

Updated On : 20 பிப்ரவரி 2017, 3:53 pm IST
பகிர்:
உலக அரங்கில் தமிழ் நாட்டின் மதிப்பு 
உருக்குலைந்து வருவது வேதனை !
 
அரியாசன ஆசையில் மனிதன் இங்கே 
ஐய்ந்தறிவு விலங்காகி வருகின்றான் !
 
அறம் மறந்து  அறிவிலி ஆகின்றான் 
ஆசைப் பிடித்து நாளும்  அலைகிறான்!
 
மனிதன் என்பதை மறந்து துளியும் 
மனிதாபிமானமின்றி மரமாகிறான்!
 
எப்படியும்  அரியாசனம் அமர்வதே 
எனது குறிக்கோள் என்று திரிகிறான் !
 
அரியாசனத்தில் அமர்ந்து முன்பு 
ஆட்சி நடத்தியோர் நிலை அறியாமல் !
 
அளவிற்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சுதான் 
அளவின்றிய பதவி ஆசையும் நஞ்சுதான் 

வாக்களித்த மக்களே வெறுக்கும்படி 
வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் !
 
ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் 
அரியாசனம் துறந்த துறவி புத்தர் !
 
பேராசை பெரு நட்டம் என்று அன்றே
பெரியோர்கள் சொல்லி வைத்தனர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments