முகப்பு
கவிதைமணி

நிலா விடு தூது: கவிஞர் இரா .இரவி

Updated On : 27 பிப்ரவரி 2017, 3:26 pm IST
பகிர்:

சங்க காலத்தில் இருந்தது நிலா விடு தூது 
சிறப்பான இக்காலத்தில் அலைபேசி விடு தூது !

தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் 
தலைவி நிலாவைத் தூது விட்டாள் அன்று !

அமெரிக்காவில் இருந்துக் கொண்டே இன்று
அலைபேசியில் முகம் பார்த்துப் பேசுகிறாள் !

Advertisement

Advertisement

நிலாவில் நீர் உள்ளது என்று இன்று
நன்றாக ஆராந்து அறிவித்தான் தமிழன் !

நிலாவிற்கு அன்றே ஈரமுண்டு என்றுதான் 
நங்கை அதனை தலைவனுக்குத் தூது விட்டாள்  ! 

நிலவை சாட்சியாக வைத்து காதலித்த 
நீங்காத நினைவுகள் காதலருக்கு உண்டு !

நிலவு பார்த்ததே என்றே பயத்தால்
நின் கரம் பிடித்தேன் என்றவர்கள் உண்டு !

நிலவுக்கும் காதலுக்கும் அன்றும்  என்றும் 
நெருங்கிய தொடர்பு உண்டு !

நிலவு பேசாது தன்னோடு பேசியதாக 
நாளும் கற்பனை செய்பவர்கள்  உண்டு !

நிலா விடு தூது இன்று காதலர்களிடையே 
நின்று விட்டப்  போதிலும் இன்றும் !

நிலாவின் மீதான காதல் காதலர்களுக்கு 
நாளும் இருந்துக் கொண்டே இருக்கின்றது ! 

புதுமண  இணைகள் செல்லும் சுற்றுலாவை
புதுமையாக தேன்நிலவு என்று பெயர் வைத்தனர் !

இனி வருங்காலத்தில் புதுமண  இணைகள்
இனிய நிலாவிற்கே சென்று வரும் காலம் வரும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments