முகப்பு
கவிதைமணி

நீதியைத்  தேடி:  கவிஞர்  இரா  .இரவி !

Updated On : 23 ஜனவரி 2017, 5:50 pm IST
பகிர்:

தன் சதையை  அறுத்து நீதி வழங்கிய 
தன்னிகரில்லா வரலாறு இங்கு உண்டு !

தன் மகனை தேர் ஏற்றிக் கொன்று நீதிக்கு 
தலை வணங்கிய வரலாறு இங்கு உண்டு !

தவறான தீர்ப்பு வழங்கிய மன்னன் 
தன் உயிர் நீத்த வரலாறு இங்கு உண்டு !

Advertisement

Advertisement

பட்டப்பகலில் விளக்குடன் மனிதனைத் தேடிய 
புகழ் பெற்ற பாடல் பலரும் கேட்டதுண்டு !

உச்ச நீதி மன்றத்தில் நீதியைத் தேடி 
உலகம் அலையும் அவலம் நேர்ந்தது !

நடிகரின்   வழக்கு என்றால் விரைவாக 
நீதி வழங்கிய வரலாறு நடந்தது உண்டு !

பெரும் பணக்காரர்கள் என்றால் உடன் 
பெரும்பாடு பட்டு தீர்ப்பு வழங்கியது  உண்டு !

பொங்கலுக்குள் வழங்க வேண்டிய தீர்ப்பு 
பொங்கலுக்குள் வழங்க முடியாது என்றனர் !

பொறுத்து போதும் என்று இன்று 
பொங்கி எழுந்து விட்டனர் மாணவர்கள் !

தாமதமான நீதியும் அநீதிதான் என்பது 
தாமாதமாகப் புரிந்தது நீதிபதிகளுக்கு !

சிறு நெருப்பை பெரும் தீயாக்கி விட்டனர் 
சிந்தையில் போராட்ட குணத்தை வளர்த்தனர் ! 

நீதியின் பிறப்பிடமான தமிழ்மண் மக்கள் 
நீதியைத் தேடி அலையும் அவலம் நேர்ந்தது !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments