முகப்பு
கவிதைமணி

சுமைகளும் சுகங்களும் !    கவிஞர் இரா .இரவி !

Updated On : 15 மே 2017, 6:38 pm IST
பகிர்:

பத்து மாதம் குழந்தையைச் சுமக்கிறாள் அன்னை 
பத்தியமாக உணவருந்தி காக்கிறாள் சேயை !

சுமையை அவள் சுகமாகவே கருதுகின்றாள் 
சுகப்பிரசவம் வேண்டுமென்று நாளும் நடக்கிறாள் !

தவவாழ்க்கை வாழ்கிறாள் என்றால் மிகையன்று 
தவம் இருந்தே குழந்தையை  ஈன்று எடுக்கிறாள் !

Advertisement

Advertisement

ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கின்றாள்
ஒவ்வொரு நொடியும் குழந்தையைக் காக்கின்றாள் ! 

கருவுற்ற தகவல் அறிந்ததும் மனம் மகிழ்கின்றாள்
கருவுற்ற நாள் முதலாய் கனவுகள் காண்கின்றாள் !

வயிற்றுக்குள் குழந்தை எட்டி உதைத்தபோதும் 
வலியினைத் தாங்கி வாய் விட்டு சிரிக்கின்றாள் !

தாய்மொழியின்  அருமை பெருமையை அவள் 
தன்சேயுக்குக்  கருவிலேயே  கற்பித்து மகிழ்கின்றாள் !

தாயோடு சேர்ந்து சேயும் ரசிக்கும் இசை
தாயின் கருவிலிருந்தே கேட்கும்   ஓசை !

பிரசவ வலி என்பது சொல்லில் அடங்காது 
பிறப்பு மறுபிறப்பு எடுத்தே வருகின்றாள் !

தாய்மை அடைந்தமைக்காக மகிழ்ந்தபோதிலும் 
தாயாகும் தருணம் உயிர் போய் உயிர் வரும் !

ஆண்கள் யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை
அன்புத் தாய்மார்கள் மட்டுமே உணர்ந்த உயிர்வலி ! 

முந்நூறு நாட்கள் அன்னை அவள் படும் பாடு 
மண்ணில் மறக்கமுடியாத துன்பம் பெரும் பாடு !

சுமையையும் சுகமாகக் கருதுபவள் அன்னை 
சுகத்தையும் சுமையாகக் கருதுவது குழந்தை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments