முகப்பு
கவிதைமணி

கல்வீச்சு: கவிஞர் இரா .இரவி

Updated On : 29 மே 2017, 4:39 pm IST
பகிர்:

அகிம்சைவாதி  காந்தியடிகள் விரும்பியதில்லை 
அன்பை விரும்புவோர் விரும்பியதில்லை கல்வீச்சு !

பலரின் தலையைப்  பதம் பார்க்கும் கல்வீச்சு 
பாவம் அப்பாவிகளும் காயம் அடைவதுண்டு !

மரத்திலிருக்கும் மாங்காய் விழ வேண்டுமென்று 
மரம் மீது சிறுவர்கள் கல் வீசுவதும் உண்டு !

Advertisement

Advertisement

தவறு எதுவும் செய்யாத முதியோர் குழந்தை மீது 
தவறி கல் விழுந்து காயம் அடைந்ததுண்டு !   

கல்வீச்சால்  உயிர் இழந்தவர்களும் உண்டு 
கல் என்பதும் கொடிய ஆயுதமே உணர்க !
  
கல்வீச்சால் பேருந்துகள் தாக்கப்படும் அவலம் 
கணினி யுகத்திலும் தொடர்வது அவலம் !

பொது சொத்தான அரசுப் பேருந்தை 
பொது மக்களே தாக்குவது மடமை !

கல்வீச்சால்  அதிகம் உடைவது கண்ணாடியே 
கண்ணாடி உருவாக்கும் கடினம் உணர்க !

எதையும் உடைப்பது எளிது அதனை 
உருவாக்குவதுதான் கடினம் உணர்க !

அமைதியாக ஊர்வலம் செல்வோர் உண்டு   
அதிலிருந்து கல்வீசும் விசமிகளும் உண்டு   !

ஊர்வலத்தின் மீது குறி வைத்துக் கல்வீசி 
ஊர்வலத்தைக்  கலைக்கும் விசமிகளும் உண்டு   !

சிலர் சொந்த வெறுப்பை மனதில் வைத்து 
சில கடைகள் மீதும் கல் வீசுவதுண்டு !

மக்கள் காவலர்கள் மீது வீசினாலும் 
மக்கள் மீது காவலர்கள்  வீசினாலும் குற்றமே !

காட்டுமிராண்டிக் காலத்துப் பழக்கம் கல்வீச்சு
கணினி யுகத்தில்  மனிதனுக்கு அழகல்ல !

புதிதாய் திறக்கும் மதுக்கடை மீதும் மக்கள் 
பொங்கி எழுந்து கல்வீசித் தாக்குகின்றனர் !

ஆளும் அரசே அனைத்து மதுக்கடைகளையும் 
அறிவிப்பால் மூடிவிட்டால் கல் வீச்சு இருக்காது !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments