முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னைக்கு 3-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 57-ஆவது லீக் ஆட்டத்தில், சென்னையின் எஃப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸô எஃப்.சி. அணியை வீழ்த்தியது.

Updated On : 14 ஜனவரி 2021, 4:22 am IST
பகிர்:

கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 57-ஆவது லீக் ஆட்டத்தில், சென்னையின் எஃப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸô எஃப்.சி. அணியை வீழ்த்தியது.
கோவாவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி தொடக்கம் முதலே அபாரமாக ஆடியது. இதனால் அந்த அணி 15-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை கான்கால்வ்ஸ் அடித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய சென்னை அணிக்கு 21-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதையும் கான்கால்வ்ஸ் கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் தொடர்ந்து போராடிய ஒடிஸô அணி 63-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை டி பிரிட்டோ அடித்தார். 
இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன்மூலம் இந்த சீசனில் 3-ஆவது வெற்றியைப் பெற்ற சென்னை அணி 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments