முகப்பு
விளையாட்டு

"குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் விஜேந்தர்  மீது நடவடிக்கை'

குத்துச்சண்டை வீரர் மீது கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று

Updated On : 12 மார்ச் 2013, 1:00 am IST
பகிர்:

குத்துச்சண்டை வீரர் மீது கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பல், விஜேந்தருடன் தங்களுக்குத் தொடர்பு உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால், விஜேந்தர் இக்குற்றச்சாட்டை மறுத்தார்.

இந்நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணை அறிக்கை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அது பஞ்சாப் போலீஸாரின் அதிகாரத்துக்கு உள்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.