சிரி... சிரி...
உருளைக் கிழங்கில் உப்பு அதிகமா இருக்கு... ரசத்தில் உப்பே இல்லை.
உருளைக் கிழங்கில் உப்பு அதிகமா இருக்கு... ரசத்தில் உப்பே இல்லை.''
'உருளைக் கிழங்கை ரசத்தில் முக்கிச் சாப்பிடுங்க... சரியா இருக்கும்!''
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
Advertisement
Advertisement
'அந்த டாக்டருக்கு குழந்தை மனசுன்னு எதைவச்சி சொல்றே?''
'பீஸூக்குப் பதிலா சாக்லெட்டுங்க கொடுத்தாலும் வாங்கிக்கொள்வாராம்!''
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'ரயில்ல என்னோட பெட்டி காணாமப் போயிடுச்சு...''
'கவலைப்படாமச் சொல்றீங்களே?''
'நான் எதுக்குக் கவலைப்படணும்... ரயில்வே டிபார்ட்மென்ட்தானே கவலைப்படணும்!''
-தீபிகா சாரதி, சென்னை -5.
'சாம்பார் வடைக்கு வச்ச ஸ்பூன் வேற லெவல்ல இருக்கே?''
'ஆமாம் சார்... வடை மாவையே ஸ்பூன் வடிவில் பொரிச்சு வச்சிருக்கோம்!''
'திருடி முடிச்சு கிளம்பறபோது ஒரு உதவி பண்ணிட்டுப் போ!''
'என்ன உதவி?''
'இந்த பீரோவுக்கு டூப்ளிகேட் சாவி ஒண்ணு வேணும்!''
'எப்ப வந்தாலும் ஏன் கடைசி பஸ்லயே எங்க வீட்டுக்கு வர்றீங்க?''
'மறுநாள் காலை வரை போகச் சொல்ல மாட்டீங்க என்ற ஒரு நம்பிக்கை தான்.'
'பிளேட்டில் கைகழுவக் கூடாது, சார்!''
'நான் கை கழுவல... பிளேட்டைத் தான் கழுவுறேன்!''
'பிரமோஷன் வரும் போல் ஆபீஸ் தூக்கத்தில் கனவு வருதே..?''
'ஆபீஸ்ல கனவா... அப்ப டபுள் பிரமோஷன் தான்!''
- பர்வதவர்த்தினி, பம்மல்.
'ஆச்சரியமா இருக்கே... உனக்கு பாயசம் கூடவா செய்யத் தெரியும்?''
'மைசூர் பாக்குங்க அது... கொஞ்சம் நீர்த்துப் போச்சு!''
'மாமியார்-மாமனாரை உன்கூட கிரவுண்ட் ஃப்ளோரிலும், அப்பா-அம்மாவை நாலாவது மாடியிலேயும் வச்சிருக்கீயே, ஏன்?''
'பெத்து வளர்த்து ஆனாக்கின அப்பா-அம்மாவை உயர்ந்த இடத்துல வைக்கிறதுதானே நியாயம்!''
'சினிமாவுக்குச் சென்ற மன்னர், ஏன் பாதியில் ஓடி வந்து விட்டார்?''
'படம் முழுக்க ஒரே சண்டையாம்!''
'சில பேரைக் கண்டால் மட்டும் இனம் புரியாத வெறுப்பு வருது, சார்!''
'ஆண்களைச் சொல்றீங்களா? பெண்களைச் சொல்றீங்களா?''
'அதான் 'இனம் புரியாத' வெறுப்புன்னு சொன்னேனே, சார்!''
'மாவுல எதுவும் மிஸ்டேக்கான்னு தெரியலை முதலாளி... தோசையெல்லாம் கிண்டிப் போகுது!''
'அதுக்கு என்னய்யா பண்ணலாம்?''
'கைமா தோசைன்னு பேர் வச்சு ஓட்டிடலாம், முதலாளி!''
'மனைவி அடிச்சதுல கன்னம் வீங்கிப் போச்சேன்னு டாக்டர்கிட்ட போய் ஊசி குத்திக்கிட் டேன்...!''
'வீக்கம் குறைஞ்சுதா?''
'கன்ன வீக்கம் தேவலை... ஆனா, ஊசி குத்துனதுலதான் கை வீங்கிப் போச்சு!''
'வெண்பா வேண்டுமா? விருத்தப்பா பாடவா? அல்லது சந்தப்பா பாடவா, மன்னா?''
'எந்தப் பாவாயினும் பரவாயில்லை... சொந்தப் பாவாக இருந்தால் போதும், புலவரே!''
'கொள்ளையர்கள் கிட்டே இருந்து மீட்ட நகைகள்ல ஒரு செயின் குறையுதேய்யா?''
'சாரி சார்... செயின் எனக்கு எப்படி இருக்குன்னு பார்க்க போட்டுக்கிட்டது, கழுத்துலயே தங்கிப் போச்சு, சார்!''
- வி.ரேவதி, தஞ்சாவூர்.