முகப்பு
குழந்தைகள் உலகம்

சிரி... சிரி...

உருளைக் கிழங்கில் உப்பு அதிகமா இருக்கு... ரசத்தில் உப்பே இல்லை.

Updated On : 14 ஜூன் 2026, 4:15 am IST
பகிர்:

உருளைக் கிழங்கில் உப்பு அதிகமா இருக்கு... ரசத்தில் உப்பே இல்லை.''

'உருளைக் கிழங்கை ரசத்தில் முக்கிச் சாப்பிடுங்க... சரியா இருக்கும்!''

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

Advertisement

Advertisement



'அந்த டாக்டருக்கு குழந்தை மனசுன்னு எதைவச்சி சொல்றே?''

'பீஸூக்குப் பதிலா சாக்லெட்டுங்க கொடுத்தாலும் வாங்கிக்கொள்வாராம்!''

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'ரயில்ல என்னோட பெட்டி காணாமப் போயிடுச்சு...''

'கவலைப்படாமச் சொல்றீங்களே?''

'நான் எதுக்குக் கவலைப்படணும்... ரயில்வே டிபார்ட்மென்ட்தானே கவலைப்படணும்!''

-தீபிகா சாரதி, சென்னை -5.



'சாம்பார் வடைக்கு வச்ச ஸ்பூன் வேற லெவல்ல இருக்கே?''

'ஆமாம் சார்... வடை மாவையே ஸ்பூன் வடிவில் பொரிச்சு வச்சிருக்கோம்!''



'திருடி முடிச்சு கிளம்பறபோது ஒரு உதவி பண்ணிட்டுப் போ!''

'என்ன உதவி?''

'இந்த பீரோவுக்கு டூப்ளிகேட் சாவி ஒண்ணு வேணும்!''



'எப்ப வந்தாலும் ஏன் கடைசி பஸ்லயே எங்க வீட்டுக்கு வர்றீங்க?''

'மறுநாள் காலை வரை போகச் சொல்ல மாட்டீங்க என்ற ஒரு நம்பிக்கை தான்.'



'பிளேட்டில் கைகழுவக் கூடாது, சார்!''

'நான் கை கழுவல... பிளேட்டைத் தான் கழுவுறேன்!''



'பிரமோஷன் வரும் போல் ஆபீஸ் தூக்கத்தில் கனவு வருதே..?''

'ஆபீஸ்ல கனவா... அப்ப டபுள் பிரமோஷன் தான்!''

- பர்வதவர்த்தினி, பம்மல்.

'ஆச்சரியமா இருக்கே... உனக்கு பாயசம் கூடவா செய்யத் தெரியும்?''

'மைசூர் பாக்குங்க அது... கொஞ்சம் நீர்த்துப் போச்சு!''



'மாமியார்-மாமனாரை உன்கூட கிரவுண்ட் ஃப்ளோரிலும், அப்பா-அம்மாவை நாலாவது மாடியிலேயும் வச்சிருக்கீயே, ஏன்?''

'பெத்து வளர்த்து ஆனாக்கின அப்பா-அம்மாவை உயர்ந்த இடத்துல வைக்கிறதுதானே நியாயம்!''



'சினிமாவுக்குச் சென்ற மன்னர், ஏன் பாதியில் ஓடி வந்து விட்டார்?''

'படம் முழுக்க ஒரே சண்டையாம்!''



'சில பேரைக் கண்டால் மட்டும் இனம் புரியாத வெறுப்பு வருது, சார்!''

'ஆண்களைச் சொல்றீங்களா? பெண்களைச் சொல்றீங்களா?''

'அதான் 'இனம் புரியாத' வெறுப்புன்னு சொன்னேனே, சார்!''



'மாவுல எதுவும் மிஸ்டேக்கான்னு தெரியலை முதலாளி... தோசையெல்லாம் கிண்டிப் போகுது!''

'அதுக்கு என்னய்யா பண்ணலாம்?''

'கைமா தோசைன்னு பேர் வச்சு ஓட்டிடலாம், முதலாளி!''



'மனைவி அடிச்சதுல கன்னம் வீங்கிப் போச்சேன்னு டாக்டர்கிட்ட போய் ஊசி குத்திக்கிட் டேன்...!''

'வீக்கம் குறைஞ்சுதா?''

'கன்ன வீக்கம் தேவலை... ஆனா, ஊசி குத்துனதுலதான் கை வீங்கிப் போச்சு!''



'வெண்பா வேண்டுமா? விருத்தப்பா பாடவா? அல்லது சந்தப்பா பாடவா, மன்னா?''

'எந்தப் பாவாயினும் பரவாயில்லை... சொந்தப் பாவாக இருந்தால் போதும், புலவரே!''



'கொள்ளையர்கள் கிட்டே இருந்து மீட்ட நகைகள்ல ஒரு செயின் குறையுதேய்யா?''

'சாரி சார்... செயின் எனக்கு எப்படி இருக்குன்னு பார்க்க போட்டுக்கிட்டது, கழுத்துலயே தங்கிப் போச்சு, சார்!''

- வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.