தென் மண்டல அட்டயா பட்டயா தமிழக ஆடவர் அணிக்கு வெள்ளிக் கோப்பை
தென் மண்டல அளவிலான அட்டயா பட்டயா போட்டியில் தமிழக ஆடவர் அணியினர் வெள்ளிக் கோப்பை வென்றனர்.
தென் மண்டல அளவிலான அட்டயா பட்டயா போட்டியில் தமிழக ஆடவர் அணியினர் வெள்ளிக் கோப்பை வென்றனர். இப்போட்டியின் மகளிர் பிரிவில் தமிழக அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
முதலாவது தென் மண்டல அட்டயா பட்டயா சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதிச்சுற்றில் புதுச்சேரி அணியுடன் மோதியது தமிழக அணி. இதில், 39-19, 36-30 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக அணி தோல்வியைத் தழுவி வெள்ளிக் கோப்பை வென்றது. தமிழக அணியின் கேப்டன் சிவசுப்பிரமணியன் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, பூடானில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள தெற்கு ஆசிய அட்டயா பட்டயா சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அதேபோல், மகளிர் பிரிவு போட்டியின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஆந்திர அணியை தமிழக அணி எதிர்கொண்டது. இதில், 18-10, 14-8 என்ற கணக்கில் தமிழக அணி வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.