முகப்பு
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:41 AM
அருந்ததி ~மீனாட்சி ~ஜாஸ்மின் ~ப்ரீத்தி ~பிரியா
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 7:10 PM

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி வென்றது.

மங்கோலிய தலைநகா் உலன்படாரில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

தலைமை பயிற்சியாளா் சான்டியாகோ நைவா தலைமையில் இந்திய அணியினா் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். மகளிா் பிரிவில்

Advertisement

48 கிலோ பிரிவில் மீனாட்சி 5-0 என புள்ளிக் கணக்கில் நோமுன்டரி அம்கலானை வீழ்த்தி தங்கத்தை வசப்படுத்தினாா்.

54 கிலோ பிரிவில் ப்ரீத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் 3 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக் வெண்கல வீராங்கனையான தைபேயின் ஹுவாங் வென்னை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

60 கிலோ பிரிவில் பிரியா 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வடகொரியாவன் வொன் யுன் வாங்கை வீழ்த்தி தங்கம் வென்றாா். 70 கிலோ பிரிவில் அருந்ததி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக செயல்பட்டு கஜகஸ்தானின் பகித் செடிஷை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

57 கிலோ பிரிவில் ஜாஸ்மினும், 80 பிளஸ் கிலோ பிரிவில் அல்ஃபியான் பதானும் வெள்ளி வென்றனா்.

மொத்தம் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 10 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது இந்தியா.

இறுதிச் சுற்றில் இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவா் அஜய் சிங் பங்கேற்றாா்.