பர்பிள் கேப் வென்ற புவனேஷ்வர் குமார்..! ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?
ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் குறித்து...
ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் (36 வயது) அபாரமாக பந்துவீசி நடப்பு ஐபிஎல் தொடரில் பர்பிள் கேப்பை வென்றுள்ளார்.
ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி 16.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 6.3 ஓவர்களில் 77/1 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்த அதியற்புதமான பந்துவீச்சுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Advertisement
இந்த சீசனில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்து புவனேஷ்வர் குமார் அசத்தியுள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் அன்ஷுல் கம்போஜ் உடன் சமன்செய்துள்ளார். ஆனால், குறைவான ரன் ரேட், சராசரி உள்ளதால் முதலிடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை புவனேஷ்வர் குமார் சமீபத்தில் நிகழ்த்தியிருந்தார். தற்போது, பர்பிள் கேப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
பர்பிள் கேப் பட்டியலில் இருப்பவர்கள்
1. புவனேஷ்வர் குமார் - 14 விக்கெட்டுகள் (16.86 சராசரி)
2. அன்ஷுல் கம்போஜ் - 14 விக்கெட்டுகள் (16.93 சராசரி)
3. இஷான் மலிங்கா - 14 விக்கெட்டுகள் (18.21 சராசரி)
4. ஜோஃப்ரா ஆர்ச்சர் - 13 விக்கெட்டுகள் (17.92 சராசரி)
5. பிரின்ஸ் யாதவ் - 13 விக்கெட்டுகள் (18.62 சராசரி)