முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் வேகப் பந்துவீச்சாளர்!

ஐபிஎல் தொடரில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

புவனேஷ்வர் குமார் - படம் | AP
பகிர்:

ஐபிஎல் தொடரில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் விளையாடி வருகிறது.

Advertisement

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான இன்றையப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் விளையாடும் 200-வது ஐபிஎல் போட்டியாகும். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளில் விளையாடும் முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 200 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் 215 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Royal Challengers Bangalore player Bhuvneshwar Kumar has set the record for being the first fast bowler to play his 200th match in the IPL series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.