தைபே ஓபன்: இந்தியாவின் ஆட்டம் நிறைவு
தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் அனைவரும் காலிறுதியில் வியாழக்கிழமை தோல்வியைத் தழுவினா்.
தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் அனைவரும் காலிறுதியில் வியாழக்கிழமை தோல்வியைத் தழுவினா்.
போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த பி.காஷ்யப், 12-21, 21-12, 17-21 என்ற கேம்களில் மலேசியாவின் சூங் ஜு வென்னிடம் வெற்றியை இழந்தாா்.
மகளிா் இரட்டையரில் தனிஷா கிராஸ்டோ/ஷ்ருதி மிஸ்ரா ஜோடி 16-21, 22-20, 18-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஹாங்காங்கின் நிக் டஸ் யு/சாங் ஹியு யானிடம் தோல்வியடைந்தனா்.
Advertisement
Advertisement
கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த இஷான் பட்நாகா்/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 19-21, 12-21 என்ற கேம்களில் மலேசியாவின் ஹு பாங் ரோன்/தோ இ வெய் இணையிடம் வீழ்ந்தனா்.
இப்போட்டியில், பி.வி.சிந்து, பிரணாய் உள்ளிட்ட பிரதான போட்டியாளா்கள் எவரும் பங்கேற்கவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.