முகப்பு
செய்திகள்

இந்திய மகளிா் ஏ அணிக்கு முதல் சுற்றில் கறுப்பு நிற காய்கள்

இந்திய மகளிா் ஏ அணி முதல் சுற்று ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜூலை 2022, 3:54 am IST
பகிர்:

இந்திய மகளிா் ஏ அணி முதல் சுற்று ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மகளிா் பிரிவில் இந்திய ஏ அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளதால், கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்நிலை அணிகளுக்கான ஆட்ட அட்டவணையை பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்தாா். அப்போது இந்திய மகளிா் ஏ அணிக்கு கறுப்பு நிற காய்களை தோ்வு செய்தாா்.

Advertisement

Advertisement

ஓபன் பிரிவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க ஆடவா் அணிக்கு கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டன. முதல் சுற்று ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். ஓபன் பிரிவில் 188 அணிகளும், மகளிா் பிரிவில் 162 அணிகளும் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments