முகப்பு
செய்திகள்

ஐசிசி தரவரிசையில் வரலாறு படைத்த பும்ரா! 

ஐசிசி டெஸ்ட் பௌலிங் தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம் பெற்று வரலாறு படைத்தாா்.

Updated On : 8 பிப்ரவரி 2024, 12:20 am IST
வெற்றிக் கொண்டாட்டத்தில் பும்ரா.
பகிர்:

ஐசிசி டெஸ்ட் பௌலிங் தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம் பெற்று வரலாறு படைத்தாா். இதன் மூலம் இந்த சிறப்பைப் பெற்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளா் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளாா்.

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் பும்ரா அபாரமாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் முதலிடத்தைப் பெற்றாா்.

பேட்கம்மின்ஸ், ககிஸோ ரபாடா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை பின்னுக்கு தள்ளி பௌலா்களில் முதலிடம் பெற்றுள்ளாா். 34 டெஸ்ட் ஆட்டங்களில் 10 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா இதற்கு முன்பு அதிகபட்சமாக தரவரிசையில் 3-ஆவது இடம் பெற்றிருந்தாா்.

Advertisement

Advertisement

நிகழாண்டு கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6/61, விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 6/45 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாா் பும்ரா.

மேலும் இதன் மூலம் 150 டெஸ்ட் விக்கெட்டுகளை துரிதமாக வீழ்த்திய இந்திய வீரா் என்ற சிறப்பையும் பெற்றாா். பும்ரா ஏற்கெனவே ஒருநாள், டி20யிலும் முதலிடம் வகித்திருந்தாா். அஸ்வின் முதலிடத்தில் இருந்த நிலையில், ரபாடாவுக்கு பின் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

881 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்திலும், 904 புள்ளிகளுடன் அஸ்வினும், 899 புள்ளிகளுடன் ஜடேஜாவும் ஐசிசி தரவரிசையில் சிறப்பிடங்களைப் பெற்றனா்.

பேட்டிங் தரவரிசை:

பேட்டிங் தரவரிசையில் இடதுகை பேட்டா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 இடங்கள் முன்னேறி 29-ஆவது இடத்தில் உள்ளாா். ஷுப்மன் கில் 14 இடங்கள் முன்னேறி 29-ஆவது இடத்தில் உள்ளாா். இங்கிலாந்து பேட்டா் ஸாக் கிராலி 8 இடங்கள் முன்னேறி 22-ஆவது இடத்தில் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments