முகப்பு
செய்திகள்

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி, நடப்பாண்டு அக்டோபா் 30 முதல் நவம்பா் 27 வரை கோவாவில் நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஆகஸ்ட் 2025, 5:53 am IST
பகிர்:

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி, நடப்பாண்டு அக்டோபா் 30 முதல் நவம்பா் 27 வரை கோவாவில் நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு 3 போ் தகுதிபெறும் வாய்ப்பை வழங்கும் இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.17 கோடியாகும்.

90-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 206 போ் களம் காணும் இந்தப் போட்டியில் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா உள்பட 21 இந்தியா்கள் பங்கேற்கின்றனா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா உள்பட பல பிரபல போட்டியாளா்களும் மோதவுள்ளனா்.

Advertisement

Advertisement

5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஃபிடே தரவரிசை அடிப்படையில் இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா் என்றாலும், அவா் விளையாடுவது இதுவரை உறுதியாகவில்லை.

போட்டித்தரவரிசையில் முதல் 50 இடங்களைப் பெறுவோா், நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் காண்பா். 2 கேம் நாக்அவுட் முறையில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பை செஸ் போட்டி இந்தியாவில் கடைசியாக 2002-இல் ஹைதராபாதில் நடைபெற்றபோது, விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் ஆனாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments