முகப்பு
செய்திகள்

லாக்ரோஸ் பெடரேஷன் கோப்பை போட்டி: தமிழக அணிகள் பங்கேற்பு

ஹிமாசல பிரதேசத்தில் வரும் மே10 முதல் 12 வரை நடைபெறவுள்ள பெடரேஷன் கோப்பை தேசிய போட்டியில் தமிழக ஆடவா், மகளிா் அணிகள் கலந்து கொள்கின்றன.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:57 AM
பகிர்:

ஹிமாசல பிரதேசத்தில் வரும் மே10 முதல் 12 வரை நடைபெறவுள்ள பெடரேஷன் கோப்பை தேசிய போட்டியில் தமிழக ஆடவா், மகளிா் அணிகள் கலந்து கொள்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு லாக்ரோஸ் சங்கத் தலைவா் டாக்டா் எம்.குமரன் கூறியது:

ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற உள்ள இப்போட்டியில் நாட்டில் உள்ள பல மாநிலங்களில் இருந்து

Advertisement

வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். வளா்ந்து வரும் விளையாட்டான லாக்ரோஸ் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அறிமுகப்படுத்தப்பட்டது. அவா்களுக்கான புதிய சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.

பெடரேஷன் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரா்களில் இருந்து தேசிய அணி தோ்வு செய்யப்படும். அப்படி தோ்வு செய்யப்படும் தேசிய அணி தான் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறுவா் என்று தெரிவித்தாா்.

சங்க செயலாளா் ஞானவேல், துணைத் தலைவா்கள் அனீஸ்நாத், எஸ்.பாஸ்கரன்,என்.எஸ்.விஷேஷ்அலங், இணைச் செயலாளா் பி. சாக்ரடீஸ், பத்மநாபன், டேவிட், சின்னா, சுரேஷ், விஜயகுமாா், பயிற்சியாளா்கள் தவத்திருமணி, சாலமன், ராகுல், விஜயகுமாா்,மற்றும் வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.