முகப்பு
செய்திகள்

பயர்ன் மியுனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி: இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

Updated On : 8 மே 2026, 7:04 am IST
பகிர்:

மியுனிக்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதியில், நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), பயர்ன் மியுனிக்கை வியாழக்கிழமை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

மொத்த கோல் கணக்கு அடிப்படையில் 6}5 என வெற்றி பெற்ற பிஎஸ்ஜி, வரும் 30}ஆம் தேதி புடாபெஸ்டில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

நடத்துகிறது.

Advertisement

Advertisement

முன்னதாக பிஎஸ்ஜி } பயர்ன் மியுனிக் அணிகள் கடந்த மாதம் 29}ஆம் தேதி பாரீஸ் நகரில் மோதிய முதல் லெக் ஆட்டத்தில் பிஎஸ்ஜி 5}4 கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், அந்த அணிகள் ஜெர்மனியின் மியுனிக் நகரில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை மோதிய ஆட்டம் 1}1 கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் முதலில் பிஎஸ்ஜிக்காக ஆஸ்மென் டெம்பெலெ 3}ஆவது நிமிஷத்திலேயே கோல் அடித்தார்.

இதனால் பயர்ன் மியுனிக்கிற்கான நெருக்கடி அதிகரித்தது.

முதல் பாதியில் அந்த அணிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, 2}ஆவது பாதியிலும் அதே நிலை நீடித்தது. ஒருவழியாக ஸ்டாப்பேஜ் டைமில் (90+4') பயர்ன் மியுனிக் தரப்பில் ஹேரி கேன் ஸ்கோர் செய்தார்.

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்குமே மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காததால், ஆட்டம் 1}1 என டிராவில் முடிந்தது. இதையடுத்து மொத்த கோல் கணக்கு அடிப்படையில் பிஎஸ்ஜி 6}5 கோல் கணக்கில் வென்றது.

இறுதி ஆட்டத்துக்கு பிஎஸ்ஜி 3}ஆவது முறையாக வந்துள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான பிஎஸ்ஜி, அதற்கு முன் 2020}இல் இறுதி வரை வந்து, இதே பயர்ன் மியுனிக்கிடம் தோல்வி கண்டது.

ஜெர்மனியில் நடைபெறும் பந்தெஸ்லிகா, ஜெர்மன் கோப்பை போட்டிகளில் சாம்பியனாகியிருக்கும் பயர்ன் மியுனிக், சாம்பியன்ஸ் லீக்கிலும் வாகை சூடி "டிரெபிள்' எனப்படும் ஒரே ஆண்டில் 3 பட்டம் வெல்லும் கனவுடன் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments