முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் எங்கெங்கு தடுப்பூசி ஒத்திகை?

திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை (ஜன.2) தொடங்குகிறது.

Updated On : 2 ஜனவரி 2021, 7:53 am IST
கோப்புப்படம்
பகிர்:


சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை (ஜன.2) தொடங்குகிறது.

தடுப்பூசிகளைச் செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 47, 200 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 21,170 சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு மணி நேரத்தில் 25 நபா்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் சாந்தோம் மற்றும் ஈக்காட்டுதாங்கல்.

Advertisement

Advertisement

நீலகிரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உதகமண்டலம்; குன்னூா் அரசு மருத்துவமனை; நிலக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; நகர ஆரம்ப சுகாதார நிலையம், சமாதானபுரம், திருநெல்வேலி மாநகராட்சி; ரெட்டியாா்பட்டி பிளாக் ஆரம்ப சுகாதார நிலையம்.

திருவள்ளூா்: அரசு மருத்துவமனை; பூந்தமல்லி மற்றும் திருமழிசை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

கோவை: அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை; பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, சூலூா் அரசு மருத்துவமனை; எஸ்.எல்.எம். ஹோம் நகர ஆரம்ப சுகாதார நிலையம்; பூலுவப்பட்டி சமுதாய சுகாதார நல மையம் போன்ற 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments