முகப்பு
உலகம்

ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை அதிர்வு உணரப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜூன் 2026, 9:44 pm IST
நிலநடுக்கம்
பகிர்:

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, மாலை 7.04 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கனில் 215 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜுர்ம் நகருக்குத் தெற்கில் சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் சில பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கங்களால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடாகும். குறிப்பாக, அங்குள்ள யூரேசிய மற்றும் இந்திய புவித்தட்டுகள் இணையும் இந்து குஷ் மலைத்தொடரில் அதிகம் நிலநடுக்க பாதிப்பு ஏற்படும்.

முன்னதாக, ஏப்ரல் 12 அன்று 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 12 பேர் பலியாகினர். 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் 2,200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

summary

Earthquake in Afghanistan! Tremors felt as far as Jammu & Kashmir and Delhi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments